< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஆம்பூர் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
|26 Jun 2022 2:51 PM GMT
ஆம்பூர் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூர் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தூய்மை இயக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா தலைமை தாங்கினார். பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேசினார்.
முன்னதாக ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.