< Back
மாநில செய்திகள்
தாவடிப்பட்டு அரசு பள்ளியில்எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தாவடிப்பட்டு அரசு பள்ளியில்எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 March 2023 6:45 PM GMT

தாவடிப்பட்டு அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தாவடிப்பட்டு நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாணவ- மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கற்றல் தொடர்பான செயல் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் மாறுவேடம் அணிந்து எண்ணும் எழுத்தும் கற்றல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்