< Back
மாநில செய்திகள்
பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில்எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில்எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 March 2023 6:45 PM GMT

பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட கற்றலை கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியா பிள்ளை, வட்டார கல்வி அலுவலர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். எண்ணும் எழுத்தும் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணதமிழன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், 2023-25-ம் ஆண்டுக்குள் 8 வயது குழந்தைகள் அனைவரும் அடிப்படை திறன்களை பெறுதல் பற்றிய கருத்துக்களை வழங்கி பேசினர். இதில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா, ஊராட்சி கவுன்சிலர் ஜெயசீலன் உள்பட பெற்றோர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்