< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
18 July 2022 4:58 PM GMT

விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சி நெய்தவாசல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடையே தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் துரை கார்த்திக், பூம்புகார் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, கிராம சுகாதார செவிலியர் சரஸ்வதி, ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்