< Back
மாநில செய்திகள்
தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 July 2022 11:49 PM GMT

தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பேரூராட்சி, தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உரப்பூங்கா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதனை எப்படி தரம் பிரித்து எடுக்கப்படுகிறது என்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 17-வது வார்டு பொதுமக்களுக்கு கோலப்பொட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாலை வீரவநல்லூர் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத்தலைவர் வசந்த சந்திரா ஆகியோர் தலைமை தாங்கினர். செயல் அலுவலர் சத்தியதாஸ் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்