< Back
மாநில செய்திகள்
தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
13 July 2022 1:19 PM GMT

தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே தூய்மைக்கான முதல் படி. பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை. ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் வாரத்தில் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது தூய்மை பணிக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என்றார். இதில் ஆசிரியர் ராஜா உறுதி மொழியை படிக்க அவரை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்