< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி

தினத்தந்தி
|
23 Jun 2023 6:58 PM GMT

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.

அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான விழிப்புணர்வு ஓவிய போட்டி, அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி, மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழியை கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்