< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Jun 2022 3:15 PM GMT

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மன்னார்குடி:

மன்னார்குடி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த பணிகளை மன்னார்குடி நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகரை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வ.உ.சி. சாலை, அருணா நகர், டிப்போ சாலை பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் தொடங்கிவைத்தார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகர் நல அலுவலர் டாக்டர் கஸ்தூரிபாய், வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், 31-வது வார்டு உறுப்பினர் ஆசியாபேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்