< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
7 Oct 2022 8:31 PM GMT

பாளையங்கோட்டையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இட்டமொழி:

பாளையங்கோட்டை ரோஸ்மேரி பெண்கள் கல்லூரியில் வைத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மத்திய மாவட்ட துணைச்செயலாளருமான விஜிலா சத்யானந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாணவிகளிடம் அவர் பேசும்போது, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுப்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல் டயானா, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்