< Back
மாநில செய்திகள்
உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
25 Jun 2022 4:36 PM GMT

தென்காசி அருகே அய்யாபுரம் கிராமத்தில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கடையநல்லூர்:

தென்காசி உழவர் சந்தை சார்பாக அய்யாபுரம் கிராமத்தில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண்மை அலுவலர் முகைதீன் பிச்சை காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கவும் கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். உழவர் சந்தை செயல்பாடுகள் விலை நிர்ணயம் பற்றியும் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் விளக்கிக் கூறினார்.

இதில் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன், தென்காசி தோட்டக்கலை துறை சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணராஜ் மற்றும் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தென்காசி உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தென்காசி வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், உதவி நிர்வாக அலுவலர்கள் கணேசன், செந்தில்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்