< Back
தமிழக செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
விருதுநகர்
தமிழக செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 31). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் காருசேரி வரை சவாரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆமத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் மத்தியசேனை அருகே வரும்போது சாலையின் குறுக்கே வந்த மூதாட்டி மீது மோதாமல் இருக்க ஆட்டோவை நிறுத்த பிரேக் பிடித்தார். அப்போது ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்