< Back
மாநில செய்திகள்
தடுப்பு கட்டையில் ஆட்டோ மோதி பெண் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தடுப்பு கட்டையில் ஆட்டோ மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
24 April 2023 6:45 PM GMT

சின்னசேலம் அருகே தடுப்பு கட்டையில் ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.

சின்னசேலம்

சின்னசேலம் போயர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகேசன். இவரது மனைவி லட்சுமி (வயது 41). முருகேசன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தை கண்ணனை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அவருடன் லட்சுமியும், ராமச்சந்திரன் என்பவரும் வந்தனர். ஆட்டோவை ரோடுமாமந்தூரை சேர்ந்த அண்ணாதுரை(51) என்பவர் ஓட்டினார்.

சின்னசேலம் சர்வீஸ் ரோட்டில் வந்த போது மரவாநத்தம் பிரிவு ரோட்டில் உள்ள தடுப்பு கட்டையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் லட்சுமி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்