< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மீது ஆட்டோ மோதி 3 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

அரசு பஸ் மீது ஆட்டோ மோதி 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
12 Dec 2022 6:54 PM GMT

அரசு பஸ் மீது ஆட்டோ மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

குளித்தலை அருகே உள்ள குறப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சென்ற ஆட்டோ ஒன்று திடீரென அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதி உள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராவ் (வயது 24), கோபிநாத் (24), சந்துரு (21) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்