< Back
மாநில செய்திகள்
போலீசாரால் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம்
மதுரை
மாநில செய்திகள்

போலீசாரால் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம்

தினத்தந்தி
|
27 May 2023 7:05 PM GMT

போலீசாரால் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடுவது வழக்கம். இந்தநிலையில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31, 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பி தரப்படாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும். இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்