< Back
மாநில செய்திகள்
மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம்

தினத்தந்தி
|
9 April 2023 6:45 PM GMT

மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம் 20-ந்தேதி நடக்கிறது.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்ட காவல் துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 9 மற்றும் இருசக்கர வாகனங்கள் 16 சேர்த்து மொத்தம் 25 வாகனங்கள் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் விடப்படும் வாகனங்களை வருகிற 19-ந்தேதி காலை 8 மணி முதல் பார்வைக்கு வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.1,000 முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. விற்பனை வரி சேர்த்து 20-ந்தேதி அன்று உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்