< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது
மாநில செய்திகள்

திருவள்ளூரில் சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது

தினத்தந்தி
|
23 Aug 2024 4:27 PM GMT

சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன வேணுகோபாலபுரம் ஊராட்சியில் உள்ள காப்பு காட்டில், சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்த முயற்சித்த கணேசன், ரவி, ஏழுமலை ஆகிய 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 கிலோ சந்தன மரம், கத்தி, மற்றும் ரம்பம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய ராசுக்குட்டி என்பவரை தேடி வருவதாக திருத்தணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்