< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,129 பேர் எழுதினர்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,129 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
20 Nov 2022 12:22 AM GMT

ஈரோட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,129 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 92 பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 33 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்கு 10 ஆயிரத்து 115 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படைகளும், 7 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டன. 33 கண்காணிப்பு அதிகாரிகள், 34 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் தேர்வு முடிந்த பிறகும் விடைத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இந்த தேர்வை மொத்தம் 6 ஆயிரத்து 129 பேர் எழுதினார்கள். 3 ஆயிரத்து 986 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் செய்திகள்