< Back
மாநில செய்திகள்
கூடலூர் போலீஸ் நிலையங்களில்   நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு

தினத்தந்தி
|
24 July 2022 12:41 PM GMT

கூடலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது

கூடலூரில் வடக்கு, தெற்கு மற்றும் லோயர்கேம்ப் ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ்ராஜா, ஆகியோர் முன்னிலையில் புகார் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. அதில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு கிடைத்தது.

மேலும் செய்திகள்