< Back
மாநில செய்திகள்
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது

தினத்தந்தி
|
2 July 2023 6:45 PM GMT

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து சென்றனர். அப்போது ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரைச் சேர்ந்த தென்பாண்டி மகன் மணிகண்ட பிரபு (வயது 26) என்பதும், அவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்ட பிரபுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்