< Back
மாநில செய்திகள்
ஆலம்பாடி அரசு பள்ளியில்  போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர்
மாநில செய்திகள்

ஆலம்பாடி அரசு பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 Sep 2022 6:45 PM GMT

ஆலம்பாடி அரசு பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புவனகிரி,

புவனகிரி அருகே ஆலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவ தேவசேனா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளாராக புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கலந்து கொண்டு போதைபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை ஒழிப்பது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்