< Back
மாநில செய்திகள்
இணை இயக்குனர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

இணை இயக்குனர் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
18 July 2023 5:34 PM GMT

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் சரியாக பணிகளை செய்கிறார்களா என ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பிறகு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களும் சுகாதார முறையில் தூய்மையாக வைத்துக் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்