< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்;முதியவர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்;முதியவர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை: ஆனைமலை அடுத்த ஆத்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகள் மவுசிகா(வயது 26). இந்த நிலையில் ஆத்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மதுரவீரன் கோவில் வீதியில் உள்ள பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் சகுந்தலா, தனது மகள் மவுசிகாவுடன் சென்று ரத்தினசாமியை தட்டிக்கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்தினசாமி, சகுந்தலாவின் மகளை தாக்கியுள்ளார். மேலும் அவரது சேலையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மவுசிகா ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் ரத்தினசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்