< Back
மாநில செய்திகள்
தாய் மீது தாக்குதல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தாய் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
26 March 2023 6:45 PM GMT

மது குடிப்பதை கண்டித்ததால் தாய் மீது தாக்குதல் வாலிபர் கைது செய்யப்பட்டார்

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள கீழமருதாந்தநல்லூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பிரகாஷ் ( வயது 23). குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட மகனின் நிலையை பார்த்து வேதனை அடைந்த இவரது தாயார் இந்திராகாந்தி மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று தாயாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திராகாந்தி அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரகாசை கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்