< Back
மாநில செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தினத்தந்தி
|
17 Sep 2022 7:34 PM GMT

பரமத்திவேலூர் வட்டாரத்தில் காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நேற்று நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்