< Back
மாநில செய்திகள்
ஓசூரில்வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது

தினத்தந்தி
|
29 April 2023 7:00 PM GMT

ஓசூர்:

ஓசூரில் வெல்டிங் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெல்டிங் தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த சபீர் மகன் முபாரக் (வயது 18). இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஒரு கட்டிடத்தின் மாடியில் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

அதில் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்ற கலீம் (வயது 22), ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அல்லா பகஷ் என்ற சில்லு (23), ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக் (22) மற்றும் காளேகுண்டா பகுதியை சேர்ந்த முகமது (20) ஆகிய 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு மதுபோதையில் முபாரக்கை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் நேற்று கைது செய்யப்பட்டு மாலையில் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்