< Back
மாநில செய்திகள்
இரிடியம் கண்டுபிடிக்கும் ரைஸ் புல்லிங் எந்திரம் என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
1 Aug 2023 5:04 PM GMT

வந்தவாசி அருகே சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி

வந்தவாசி அருகே சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரைஸ் புல்லிங் எந்திரம்

விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து இரிடியம் கண்டுபிடிக்கும் ரைஸ் புல்லிங் எந்திரம் வைத்து இருந்த வந்தவாசி தாலுகா அலத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 40), திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) ஆகியோரிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் காட்டிய ரைஸ் புல்லிங் எந்திரத்தை பார்த்தபோது அதில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கர்கணேஷ் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.

2 ேபர் கைது

இதையடுத்து வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று காண்டீபனை கைது செய்து ரைஸ் புல்லிங் எந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காண்டீபன் செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலி டாக்டராக மருத்துவம் பார்த்தபோது ஒரத்தி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ரைஸ் புல்லிங் எந்திரத்தை பணம் கொடுத்து வாங்க இடைத்தரகர்கள் வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

சினிமா பாணியில்...

அவர்களிடம் இருந்து போலி ரைஸ் புல்லிங் எந்திரம், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை படத்தில் கலசத்தை வைத்து ஏமாற்றும் காட்சி போல் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்