< Back
மாநில செய்திகள்
ஓசூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளி கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளி கைது

தினத்தந்தி
|
24 May 2023 7:00 PM GMT

ஓசூர்:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுனில் வர்மா (வயது 39). இவர் ஓசூர் பேடரபள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது தாயிடம் சிறுமி அழுதவாறு கூறினாள். இதையடுத்து சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் வர்மாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்