< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைதுரூ.8 ஆயிரம், 4 செல்போன்கள் பறிமுதல்
|8 Jan 2023 6:45 PM GMT
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அருகே சிலர் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.
பின்னர் அங்கு செல்போன் மூலம் லாட்டரி விற்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சதாசிவம் (வயது 25), முருகப்பெருமாள் (26), பொன்னர் (27), மதி என்கிற மகேந்திர பிரசாத் (24), தங்கபாண்டி (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 300 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.