< Back
மாநில செய்திகள்
ஓசூரில்  புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

தினத்தந்தி
|
10 Sep 2022 5:19 PM GMT

ஓசூரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பையுடன் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 19 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர் சென்னை சிட்லபாக்கம் வாசவி நகரை சேர்ந்த ராஜன் (வயது 51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்