< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தொப்பூர் அருகேகோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது
|3 Aug 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி:
தொப்பூர் அடுத்த சாமியார்கொட்டாய் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மதியம் மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
பின்னர் ஊரை சுற்றியு தேடிப் பார்த்தபோது உண்டியலில் திருடிய பணத்தை எண்ணி கொண்டிருந்த அந்த நபரை ஊர்மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிவன் கோவிலில் உண்டியல் பணத்தை திருட முயன்றவர் மருளுகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சஞ்சய் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.