< Back
மாநில செய்திகள்
ஆயுதப்படை போலீசாரின் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு
அரியலூர்
மாநில செய்திகள்

ஆயுதப்படை போலீசாரின் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு

தினத்தந்தி
|
6 Feb 2023 7:05 PM GMT

ஆயுதப்படை போலீசாரின் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவுபெற்றது.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நடைபெற்றது. 15 நாட்கள் நடந்த இப்பயிற்சியில் போலீசாருக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, ஆயுதப் பயிற்சி, முதல் உதவி வகுப்பு, தீயணைப்பு வகுப்பு, தற்காப்பு பயிற்சி மற்றும் யோகா பயிற்சி முதலியவை அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இப்பயிற்சி நிறைவு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

மேலும் செய்திகள்