< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கருமுட்டையை விற்று விட்டதாக கூறிகருத்தரிப்பு மையத்தில்கணவன்- மனைவி வாக்குவாதம்
|18 April 2023 6:45 PM GMT
ஓசூரில் கருமுட்டையை விற்று விட்டதாக கூறி கருத்தரிப்பு மையத்தில் கணவன்- மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
கருத்தரிப்பு மையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் கணவன்- மனைவி இருவரும் கருத்தரிப்புக்காக சிகிச்சைக்கு சென்றனர். அதற்காக ரூ.3½ லட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த தம்பதியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி மற்றும் உறவினர்கள் அந்த கருத்தரிப்பு மையத்தில் கேட்டனர்.
வாக்குவாதம்
அதற்கு அவர்கள் சரிவர பதில் கூறவில்லையாம். இதனால் கணவன்- மனைவி மற்றும் உறவினர்கள் கருத்தரிப்பு மைய டாக்டர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கருத்தரிப்பு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.