< Back
மாநில செய்திகள்
குரும்பூர், காயாமொழி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குரும்பூர், காயாமொழி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தினத்தந்தி
|
9 Jun 2022 10:31 AM GMT

குரும்பூர், காயாமொழி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின்விநியோக செயற்பொறியாளர்

விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனால் வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகர், காயல்பட்டணம் ரோடு, தேரிகுடியிருப்பு, பூச்சிக்காடு, காயாமொழி, மேலகானம், செங்குழி, மானாடு, செட்டிவிளை, சோலைகுடியிருப்பு, குரும்பூர், அழகப்பபுரம், நல்லூர், வீரமாணிக்கம், அம்மன்புரம், வள்ளிவளை, சுகந்தலை, பன்னம்பாறை, தோப்புவளம், முத்துகிருஷ்ணாபுரம், முதலூர், சுப்புராயபுரம், கண்டுகொண்டான்மாணிக்கம், கருவேலம்பாடு, ஆனந்தபுரம், பழங்குளம், அறிவான்மொழி, அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம், தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், பிடாநேரி, தைலாபுரம், பாலசுப்பிரமனியபுரம், தென்திருப்பேரை, குரங்கனி, மஞ்சுவளை, கோட்டுர், வேப்பங்காடு, அடைக்கலாபுரம், வாகைவிளை, ராமசாமிபுரம், சிவலூர், கொட்டங்காடு, ஞானியார் குடியிருப்பு, கொம்மடிக்கேகாட்டை, சொக்கன்குடியிருப்பு, உடைபிறப்பு, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, வெயிலுகந்தம்மன்புரம், மரையன் கல்லூரி பகுதி ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்