< Back
மாநில செய்திகள்
விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
14 Feb 2023 7:46 PM GMT

விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பி.டி.சி. ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் மற்றும் விமான வாடிக்கையாளர் சேவை தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சிைய பெற 18-25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 3 மாதம் நடைபெறும் இந்த பயிற்சியில் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான மொத்த செலவு தொகையான ரூ.20 ஆயிரத்தையும் தாட்கோ வழங்கும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஏ.ஏ.எஸ்.எஸ்.சி. சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சிைய பெற்றவர்களுக்கு தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தாட்கோ மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதில் சேர தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்