< Back
மாநில செய்திகள்
தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

"தமிழ்ச் செம்மல்" விருது பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
14 Sep 2023 6:55 PM GMT

“தமிழ்ச் செம்மல்” விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விழுப்புரம் மாவட்ட அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக்குறிப்பு, நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் 10.10.2023-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக்கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக்காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக்கூடாது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்