< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
|21 May 2022 5:10 PM GMT
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணாமலை நகர்,
அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் உறுதி மொழியை வாசிக்க அலுவலர்கள், ஊழியர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.