< Back
மாநில செய்திகள்
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 May 2023 6:51 PM GMT

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், துணை பொது மேலாளர் (சேப்டி அண்ட் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் (மெக்கானிக்கல்) அசோகன், முதுநிலை மேலாளர் (பேப்பர் மெஷின்) முத்துராமன், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், காவல் ஆய்வாளர் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி வைத்தியநாதன், துணை மேலாளர் (பாதுகாப்பு) மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலிராஜன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்