< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

தினத்தந்தி
|
2 Sep 2023 1:04 PM GMT

ஓய்வு பெற்ற கனிமவளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

விழுப்புரம்,

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வு பெற்ற கனிமவளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்