< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்
|8 July 2022 6:30 PM GMT
கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வித்துறை நிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.