< Back
மாநில செய்திகள்
அண்ணா நுழைவு வாயில், கருணாநிதி சிலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அண்ணா நுழைவு வாயில், கருணாநிதி சிலை

தினத்தந்தி
|
8 July 2022 4:26 PM GMT

திருவண்ணாமலையில் அண்ணா நுைழவு வாயில், கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலையில் அண்ணா நுைழவு வாயில், கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கருணாநிதி சிலை

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்று பயணமாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் ஆராஞ்சி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.

தொடர்ந்து மாலையில் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

கருணாநிதி சிலையானது வெண்கலத்தில் 8 அடி உயரத்தில் 13 அடி பீடத்தின் மேல் கம்பீரமாக அமைக்கப்பட்டு உள்ளது.

கட்சி கொடி ஏற்றினார்

அதன் அருகில் சுமார் 66 அடி உயரமுள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் கட்சி கொடியை அவர் ஏற்றினார். தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க.உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார்.

கூட்டத்திற்கு அனைத்து பகுதியில் இருந்தும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் நன்றி கூறினார்.

சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள்

முன்னதாக திருவண்ணாமலை மாட வீதி பெரியத் தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்