< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
4 Dec 2022 6:45 PM GMT

திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திட்டச்சேரி:

திருச்செங்காட்டங்குடி ஊராட்சி புதுக்கடையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.கால்நடை உதவி டாக்டர்கள் முத்துக்குமார், சிவபிரியா, ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சதிஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன், கால்நடை ஆய்வாளர் தனசேகரன் மற்றும் கால் நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்