< Back
மாநில செய்திகள்
முதுநிலை தட்டச்சு தேர்வில் ஆண்டிப்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம்
தேனி
மாநில செய்திகள்

முதுநிலை தட்டச்சு தேர்வில் ஆண்டிப்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம்

தினத்தந்தி
|
3 Jun 2022 12:05 PM GMT

முதுநிலை தட்டச்சு தேர்வில் ஆண்டிப்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.


தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வு நடைபெற்றது. தேனி மாவட்டத்திலும் 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று இயைணத்தில் வெளியானது.

இதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவணபுவனேஷ் என்ற மாணவர் முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரின் தந்தை ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவரை தட்டச்சு பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், முதல்வர் உமாமகேஷ்வரி மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

இந்த தட்டச்சு பள்ளியில் படித்த மாணவர்கள் இதுவரையில் 8 முறை மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்