< Back
மாநில செய்திகள்
தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்ம சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்ம சாவு

தினத்தந்தி
|
15 Sep 2023 6:45 PM GMT

நாகையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாகையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வசித்து வந்த மூதாட்டி

நாகை கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மனைவி சரோஜா(வயது 67). இவர்களது மகன்களான கோவிந்தராஜ், ராஜா ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகசுந்தரம் இறந்து விட்டதால், சரோஜா மட்டும் கீரைக்கொல்லை தெருவில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மர்ம சாவு

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சரோஜா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சரோஜா வீட்டிற்கு சென்று கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது அங்கு சரோஜா இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது காது மற்றும் வாய் பகுதியில் ரத்தம் கசிந்து இருந்தது.

போலீசார் விசாரணை

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா? என்று கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார் மூதாட்டி சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி சரோஜா எப்படி இறந்தார்? காது மற்றும் வாயில் ரத்தக்கசிவு இருந்ததால் மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்