< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
கரூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
13 July 2023 6:22 PM GMT

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

புகழூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (வயது 63). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள கிணற்றின் அருகே பூக்களை பறித்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுளா கிணற்றில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இறங்கி மஞ்சுளாவை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மஞ்சுளா பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்