< Back
மாநில செய்திகள்
சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
29 Aug 2023 6:37 PM GMT

சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆரணி

சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

போளூர் தாலுகா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகள் உள்ளாள். அவர்கள் விவசாய பொருட்களை விற்க செல்லும்போது அதே பகுதியில் வசிக்கும் தாத்தா உறவுமுறை கொண்டவர் வீட்டில் மகளை விட்டுச்செல்வர்.

இந்த நிலையில் அந்த சிறுமியை பேத்தி முறை என பார்க்காமல் அந்த முதியவர் உல்லாசமாக இருந்துள்ளார்.

பல நாட்களாக இது தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவந்தது. அவளுக்கு உடல்நல குறைவும் ஏற்படவே பெற்றோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மருத்துவ குழுவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவத்தை கூறினாள்.

இதனையடுத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான முனியன் (வயது 60) என்பவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்