< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர் சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
3 Oct 2023 6:53 PM GMT

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், வாலஜா நகரத்தை சேர்ந்த முருகானந்தத்தின் மகன் ராஜேஷ்குமார்(வயது 22). இவர் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் கீழப்பழுவூரில் உள்ள அவரது நண்பரை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். கீழப்பழுவூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவர் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்