< Back
மாநில செய்திகள்
மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்

தினத்தந்தி
|
2 July 2022 5:19 PM GMT

காதல் மோகத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடியே சென்ற மற்றொரு சகோதரியால் பரபரப்பு

விழுப்புரம்

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரும், அவரது மனைவியின் தங்கையும் காதலித்து வந்தனர். இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை அந்தப் பெண் தனது மற்றொரு அக்காளுடன் விழுப்புரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

இதனிடையே சென்னையில் இருந்து வந்திருந்த அந்த தனியார் நிறுவன ஊழியர், தனது காதலி, நகை கடைக்கு வந்துள்ளதை அறிந்து அந்த கடையின் அருகில் சென்று அவரை காரில் ஏற்றிக்கொண்டு கடத்த முயன்றார். இதைப்பார்த்த அந்த பெண்ணின் அக்காள், காரில் தொங்கியபடியே சென்றுள்ளார். அந்த தனியார் நிறுவன ஊழியரும் காரை நிறுத்தாமல் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் அதாவது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து சென்னை மார்க்கமாக வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அந்த காரை விரட்டிச்சென்று பிடித்து கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்