< Back
மாநில செய்திகள்
திராவகம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

திராவகம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
13 July 2023 6:19 PM GMT

திராவகம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 50). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தண்ணீர் என்று நினைத்து திராவகத்தை (ஆசிட்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்