< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சாவு
திருச்சி
மாநில செய்திகள்

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
17 Jun 2023 8:11 PM GMT

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான்கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ்(வயது 29). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆயில் மில்-மாஜி ராணுவ காலனி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் நிக்கோலஸ் சென்று கொண்டிருந்தார்.

பொன்மலை கணேசபுரம் ஆர்ச் அருகே வந்தபோது நிலை தடுமாறி அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கழிவுநீர் வாய்க்காலில் நிக்கோலஸ் பிணமாக மிதந்ததை கண்டு அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ேமலும் இது தொடர்பாக தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிக்கோலசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்