< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த முதியவர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 6:28 PM GMT

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தோகைமலை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 68). இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் தோகைமலைக்கு குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மணப்பாறை தாதனூர் பகுதியை சேர்ந்த வீரமலை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக, கந்தசாமி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தசாமியின் உறவினர் வனிதா கொடுத்த புகாரின்பேரில், வீரமலை மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்